லூலு மஹாலில் கட்டுக்கடங்காத கூட்டத்தில் நடிகையின் அந்த இடத்தில் கைவைத்து அத்துமீறிய ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.!

சினிமாவில் நடிக்கின்ற நடிகர்களை ரசிகர்கள் பல நேரங்களில் அவர்களை ஒரு சக மனிதர்களாக பார்க்க மறந்து விடுகிறார்கள்.. அவர்கள் ஏதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்கள் போன்று இல்லை ஏதோ கடவுளை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தரிசனம் செய்வது போன்றும் கண்மூடித்தனமாக செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.. ஆனால் சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் அவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் தான் என்பதை உணர முடியும்.. சில நேரங்களில் ரசிகர்களால் சில நடிகர் நடிகைகள் அவஸ்தைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக நேரிடுகின்றது..அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஒரு நடிகைக்கு நடந்திருக்கின்றது.அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…

பிரபாஸ் நடிக்கும் புதிய படமான ‘ராஜா சாப்’ படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழாவின்போது, நடிகை நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் நிகழ்ச்சி முடிந்து திரும்ப முயன்றபோது, கட்டுக்கடங்காத கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக, அவரால் தனது வாகனத்தைக்கூட நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.


சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களில், நிதி அகர்வால் மிகவும் பீதியடைந்தது தெளிவாகத் தெரிகிறது. இறுதியாக, பவுன்சர்கள் பெரும் சிரமத்திற்குப் பிறகு கூட்டத்தில் இருந்து அவரை மீட்டு காரில் ஏற்றினர். காருக்குள் ஏறியதும், ‘கடவுளே, அங்கே என்னதான் நடந்தது?’ என்று அவர் கேட்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், பிரபலங்களின் பாதுகாப்பு மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளில் செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார். ‘ஒருசில ஆண்கள் கூட்டம் கழுதைப்புலிகளை விட மோசமாக நடந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் ஒரு பெண்ணை துன்புறுத்தும் இவர்களை வேறு கிரகத்திற்கு அனுப்ப முடியாதா?’ என சின்மயி எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். படக்குழுவினர் பாதுகாப்பு விஷயத்தில் பெரிய தவறு செய்துவிட்டதாக ரசிகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். பெரிய பட்ஜெட் படத்தின் விளம்பர நிகழ்வை இவ்வளவு சிறிய இடத்தில் நடத்தும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.


மாருதி இயக்கும் ‘ராஜா சாப்’ என்ற ஹாரர்-காமெடி திரைப்படத்தில் பிரபாஸுடன் சஞ்சய் தத், மாளவிகா மோகனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹைதராபாத் சம்பவம் குறித்து நடிகையோ அல்லது படத் தயாரிப்பாளர்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன…